Published : 01 Mar 2016 10:29 AM
Last Updated : 01 Mar 2016 10:29 AM

‘கால இயந்திரமான’ கட்டுரை!

ராணிப்பேட்டை ரங்கனின் ‘அது அந்தக் காலம்’ கட்டுரை அண்ணா, கலைஞர் ஆகியோரின் பேச்சையும் அவர்களைப் போல் கரகரக் குரலில் பேசிய கழகக் கண்மணிகளின் பேச்சையும் கேட்ட அந்தக் காலத்துக்கே அழைத்துச் சென்றுவிட்டது. ‘அண்ணா வருகிறார், வருகிறார், வந்துகொண்டே இருக்கிறார்; வருகின்ற வழி எல்லாம் உங்களைப் போல் தொண்டர்கள் அவரை வழிமறித்து நிறுத்திப் பேசச் சொல்வதால், தட்ட முடியாமல் பேசி வருகின்ற காரணத்தால் தாமதமாகிறது, இதோ வந்துவிட்டார்' என்ற பேச்சையெல்லாம் கேட்டது அப்படியே காதுக்குள் ஒலிக்கிறது.

‘கூலி உயர்வு கேட்டான் அத்தான்; குண்டடி பட்டுச் செத்தான்' போன்ற கழகத்தின் வாசகங்களும் நினைவில் நிழலாடுகின்றன. இன்று தொலைக்காட்சிகளில் பேட்டி தருகிறவர்கள், ‘எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால், எங்கள் போராட்டம் தொடரும்' என்று தெள்ளத் தெளிவாகத் தமிழில் பேசுகிறார்கள் என்றால், அதற்கு திராவிட முன்னேற்றக் கழகமே முன்னோடி.

- அ. ஜெயினுலாப்தீன், சென்னை.



நடுப் பக்கத்தில் வெளியான ராணிப்பேட்டை ரங்கனின் கட்டுரை அருமை. 50 ஆண்டுகால அரசியலை இளைஞர்களுக்கு தெளிவாகப் புரியும் வகையில் மெல்லிய நகைச்சுவையுடன் அருமையாகச் சொல்லியிருக்கிறார்.

- முருகன், கன்னியாகுமரி. ‘உங்கள் குரல்’ வழியாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x