Published : 25 Feb 2016 10:44 AM
Last Updated : 25 Feb 2016 10:44 AM

கதா நதி - கங்கை நதி

பிரபஞ்சன் எழுதிவரும் தொடர் ரசிக்கவைக்கிறது. ‘சீதாவின் சொற்கள் சத்தம் போடுவதில்லை, சுருதி பிசகியதும் இல்லை, சாவியாகாத நெல் மணிகளைத் தூவியபடியே செல்பவர் சீதா ரவி’ என ஒரு கதாசிரியரைத் தனக்கு மட்டுமே அமைந்த நடையில் அறிமுகம் செய்த பிரபஞ்சனின் எழுத்து விசுவாசிகளில் அடியேனும் ஒருவன். பிரிமணை எறும்புகள் கதையில் வரும் ‘எறும்பு பிரிமணையை அண்டறது அதன் ஈரத்துக்கா? இல்லை உன் மனசோட ஈரத்துக்கான்னு தெரியலை?’ என்ற வரிகளைக் குறிப்பிட்டு பாராட்டிய விதம் மனதை அள்ளியது. வெளியே தெரியாத வேர்களை வெளிச்சமிட்டுக் காட்டும் இந்தத் தொடர், கதா நதி மட்டுமல்ல, கங்கை நதியும் கூட!

- கு.மா.பா. கபிலன். சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x