Published : 07 Dec 2015 10:29 AM
Last Updated : 07 Dec 2015 10:29 AM

மக்களுக்கான அதிகாரி?

என்னே ஒரு அறிவார்ந்த மறுப்பு கூறியுள்ளார் சுகாதாரத் துறைச் செயலர்?. மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 18 நோயாளிகள் உயிரிழக்கவில்லை. நோயாளிகள் குறிப்பிட்ட நேர இடைவெளியில்தான் இறந்துள்ளனர். ஆக்ஸிஜன் இல்லை என்றால் அனைத்து நோயாளிகளும்தான் இறந்திருப்பர்.

எனவே, நோயின் தீவிரத்தால்தான் சிலர் இறந்துள்ளனர்” என்று! ஒரு மருத்துவமனையில் சிகிச்சைபெறும் அனைத்து நோயாளிகளும் ஆக்சிஜன் தேவை உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள் என்பது பாமரனுக்கும் தெரியும்.

ஆக்சிஜன் தேவை இருந்த நோயாளிகள்தான் இறந்துள்ளார்கள் என்பதே குற்றச்சாட்டு. மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய அரசுச் செயலர் என்ன காரணத்தினாலோ மருத்துவமனைக்கு ஆதரவாகப் பேசுகிறார். இவர்கள் எப்போதுதான் மக்களுக்கான அதிகாரிகளாக மாறப்போகிறார்களோ?

- அஹமது,சவூதி அரேபியா. இணையதளம் வழியாக…



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x