Published : 22 Dec 2015 11:58 AM
Last Updated : 22 Dec 2015 11:58 AM

கண்ணீர் வருகிறது

‘நம்பியாறு’ - உண்மை நிலையை எழுதியமைக்கு நன்றி. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் ஏர்வாடி நம்பியாற்றில் அவ்வளவு மணல் இருந்தது. ஞாயிறு மாலைகளில் எனது மூன்று குழந்தைகளையும் பாலத்துக்குக் கீழ்ப் பக்கம் விளையாட விட்டு நாங்களும் கூட உட்கார்ந்திருப்போம். பரந்த மணற்பரப்பில் குழந்தைகள் உற்சாகமாக ஓடி ஆடி விளையாடிது இன்றும் பசுமை நினைவுகள்.

குழந்தைகள் தங்களின் செல்லக் கைகளால் குழி தோண்டி ‘‘தண்ணீர் வந்துவிட்டது’’ என உற்சாகம் பொங்கக் கூவி ஆடிய நிகழ்வு இனி காணக் கிடைக்காது. ஏனெனில், அதே இடத்தில் இரண்டு லாரிகளை மேலே மேலே நிறுத்தினாலும் தெரியாத அளவுக்கு ஆழத்தில் மணலைத் தோண்டி எடுத்துவிட்டார்கள். கண்ணீர் வருகிறது, என்ன செய்ய?

- டி.பால் மாணிக்கராஜ், திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x