Published : 21 Dec 2015 10:42 AM
Last Updated : 21 Dec 2015 10:42 AM

அதிகாரம் இல்லாத ஆணையம்!

போதிய சட்டங்கள் இல்லாததால் நியாயமாகத் தேர்தலை நடத்த முடியவில்லை என்ற தலைமைத் தேர்தல் ஆணையரின் வேதனை நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ள அனைவராலும் கவனிக்கப் படவேண்டிய ஒன்று.

அரசியல் கட்சிகள் தங்களது பணபலத்தை ஒவ்வொரு தேர்தலிலும் காட்டும் முனைப்பில் இருப்பதால், புதிய சட்டங்களுக்கு இடம்கொடுக்க மாட்டார்கள். மக்களாகிய நமக்கு இருக்கும் நம்பிக்கை நட்சத்திரங்கள் குடியரசுத் தலைவரும் உச்ச நீதிமன்றமும்தான்.

அவர்களாலும் முடியவில்லை என்றால், எல்லோரும் நோட்டாவுக்கே ஓட்டைப் போட்டு எதிர்ப்பைக் காண்பிக்க வேண்டியதுதான்.

- பெ. குழந்தைவேலு, வேலூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x