Published : 24 Nov 2015 11:46 AM
Last Updated : 24 Nov 2015 11:46 AM

எல்லோருக்கும் மகிழ்ச்சி

2005-க்கு முன் பிஹாரில் நடந்த லாலுவின் ஆட்சியை நிதிஷின் கடந்த 10 ஆண்டு கால நிர்வாகத்துடன் ஒப்பிட்டு, பக்கவாட்டில் தமிழக அரசியல் சூழலையும் விரித்துவைத்து அனைவரையும் சிந்திக்கவைத்திருக்கிறது ‘மக்கள் முதல்வர்’ கட்டுரை. நிதிஷ் செயல்பாடுகளில் சிறப்பாக நோக்க வேண்டியது அவரின் அகங்காரம் இல்லாத இயல்பு எனத் தோன்றுகிறது.

சுதந்திரமாகப் பணியாற்றும் உரிமையை மாவட்ட ஆட்சியர்களுக்குக் கொடுத்து சாலை கட்டுமானத்தை துரிதப்படுத்தி பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தியது பாராட்டுக்குரியது. அடுத்து, கல்வி குறித்து தொலைநோக்குப் பார்வையோடு 15 லட்சம் ஆசிரியர்களை நியமித்து பிஹார் மக்களின் கல்வித் தரத்தை உயர்த்தியவர். அத்தகைய நிதிஷ் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருப்பதைப் பலர் ஆரவாரத்தோடு வரவேற்றுள்ளனர்.

- எஸ். சொக்கலிங்கம், கொட்டாரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x