Published : 23 Nov 2015 10:23 AM
Last Updated : 23 Nov 2015 10:23 AM

ஒருவர் பலவீனம் இன்னொருவர் பலமா?

’காங்கிரஸ் வலுப்பெற இது நல்ல வாய்ப்பு’ தலையங்கம், காங்கிரஸுக்குப் புத்துயிர் கொடுக்கும். காங்கிரஸில் பெரும்பாலும் தலைவர்களே இருக்கிறார்கள், தொண்டர்கள்தான் அவ்வளவாக இல்லை. தொண்டர்களை உருவாக்கினால் காங்கிரஸ் எழுச்சி பெறும்.

அறிவுஜீவித் தலைவர்களின் அறிவுரையைக் கேட்காமல் அடிமட்டத் தொண்டனின் அறிவுரையைக் கேட்டால் நிச்சயம் காங்கிரஸ் வலுப்பெறும். அரசியலில் வெற்றியும் தோல்வியும் சகஜம்தான். ஆனால், மாபெரும் தேசியக் கட்சியான காங்கிரஸ் தோற்றதுதான் ஆச்சரியம். காங்கிரஸ் செய்த அத்தனை தவறுகளையும் இப்போது பா.ஜ.க-வும் செய்துகொண்டிருக்கிறது. அதனால்தான் காற்று மீண்டும் காங்கிரஸ் பக்கம் வீசுகிறது. ஒரு கட்சியின் தோல்விதான், இன்னொரு கட்சிக்குப் பலம் சேர்க்கும் நிலைதான் இன்று இருக்கிறது.

- மா.கார்த்திகேயன், ஆர்.எஸ்.மங்கலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x