Published : 26 Nov 2015 09:28 AM
Last Updated : 26 Nov 2015 09:28 AM

அதிகாரத்திலும் எளிமை

நிலக்கோட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான ஏ.எஸ். பொன்னம்மாளின் மறைவு ஒரு பெரிய இழப்பு என்றே சொல்ல வேண்டும். தமிழக அரசியலில் நேர்மையாகக் கடைசிவரை வாழ்ந்த ஒரு சிலரில் பொன்னம்மாளும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து பின்னர் அரசியல் வானில் பிரகாசித்தும்கூட எளிமையான வாழ்க்கையைக் கடைப்பிடித்தவர். பொதுவாழ்வுக்காகத் தனது சொந்த வாழ்வையே துறந்தவர்.

கட்சிக் கொள்கைகளை வழுவாது கடைபிடித்தவர். பின்தங்கிய தொகுதியான நிலக்கோட்டையில் பல வளர்ச்சித் திட்டங்கள் வருவதற்கு பொன்னம்மாள் முக்கியமான காரணகர்த்தா என்பது தொகுதி மக்கள் பால் அவர் கொண்டிருந்த அன்புக்கு ஒரு எடுத்துக்காட்டு. அவரது புகழுக்கு சிகரம் வைத்தாற்போல தொகுதிக்கு மகளிர் கல்லூரியைக் கொண்டு வந்தது அன்னாரது பெயரை என்றும் நிலைநாட்டும் என்பது திண்ணம்.

- ஜா. அனந்த பத்மநாபன், திருச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x