Published : 23 Nov 2015 10:24 AM
Last Updated : 23 Nov 2015 10:24 AM

இசையால் வசமாகும்

கோவாவில் நடந்த சர்வதேசத் திரைப் படவிழாவில் ‘நூற்றாண்டு சாதனை விருது’பெற்ற இசைஞானி இளையராஜா சமீபகாலமாகத் தலைதூக்கியிருக்கும் வன்முறைகளைக் குறைப்பதற்கும், அதை முற்றிலும் ஒழிப்பதற்கும் இசையைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

இசையால் மட்டுமே மனதை நல்வழிப்படுத்த முடியும். இளம் வயதிலிருந்தே இசையைப் பிஞ்சு உள்ளங்களில் நிரப்பினால் கோபம், பொறாமை போன்ற கசடுகள் அவர்கள் மனதில் தோன்றாமல், இளமைக் காலங்களில் வன்முறை எண்ணங்கள் எழாமல் சமூகத்துக்குப் பயன்படும் நற் சிந்தனை கொண்ட மனிதர்கள் இவ்வுலகுக்குக் கிடைப்பார்கள் என அவர் கூறியது ஏற்புடையதே!

- அ. பட்டவராயன், திருச்செந்தூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x