Published : 28 Nov 2015 10:21 AM
Last Updated : 28 Nov 2015 10:21 AM

நிதர்சனமும் விமர்சனமும்

7-வது ஊதியக் குழுவின் பரிந்துரை குறித்த கட்டுரை, வெளியில் தெரியாத பல விஷயங் களைப் பேசியது. இந்தப் பரிந்துரை யைப் பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதனால், இந்தியப் பொருளாதாரமே சரிந்துவிடும் எனும் அளவுக்குச் சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இதனால், இந்தியாவின் ஜி.டி.பி.யில் வெறும் 0.56%தான் செலவாகும் என்று தெளிவுபடுத்தப்பட்டும் விமர்சனங்கள் நின்றபாடில்லை.

அரசு ஊழியர்கள் தாங்கள் பெறும் ஊதியத்தை சுவிஸ் பேங்கில் கொண்டு பதுக்கப்போவதில்லை. அவர்கள் அதைச் சந்தைக்குக் கொண்டுசெல்லும்போது, சந்தை விரிவடையவும் வேலைவாய்ப்பைப் பெருக்கவுமே செய்யும். எனவே, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிள்ளிக் கொடுக்கப்படும் இந்த உயர்வை இத்தனை தூரம் விமர்சிக்கத் தேவையில்லை. இந்தக் கட்டுரையில் முக்கியமான உண்மைகள் வெளிவந்திருப்பது ஆறுதல் தருகிறது.

- கி. ரமேஷ், மின்னஞ்சல் வழியாக…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x