Published : 23 Nov 2015 10:20 AM
Last Updated : 23 Nov 2015 10:20 AM

எங்களுக்கான குரல்

தீயணைப்புத் துறையினரின் தன்னலமற்ற பணியைப் பதிவுசெய்திருக்கும் ‘நம்ம உயிரு மறந்துபோயிரும்’கட்டுரை மிகவும் அருமை. இந்தச் சேவையில் இருக்கும் சவால்களையும் அதனால் விளையும் நன்மைகளையும் சிறப்பாக எடுத்துரைத்தமைக்கு நன்றி.

- தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மாநிலப் பயிற்சி மைய ஊழியர்.

பெருமிதமும் வருத்தமும்

ஆபத்துக் காலங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரின் செயல்பாடுகள் குறித்த ‘நம்ம உயிரு மறந்துபோயிரும்’கட்டுரையைப் படிக்கும்போது பெருமிதமும் வருத்தமும் ஒருசேர ஏற்பட்டது. அவர்களின் பணிச் சுமைகளை அறிந்தபோது வருத்தம் மேலோங்கியது. அவர்களுக்கான பணிப் பாதுகாப்பு உத்தரவாதப் படுத்தப்பட வேண்டும். மன அழுத்தம் இல்லாத சூழல் இருந்தால்தான் அவர்களால் மேலும் திறமையுடன் செயல்பட முடியும். தீயணைப்புத் துறையினரின் சங்கடங்கள் களையப்பட வேண்டும். இனிமேல் அவர்களைப் பார்க்கும்போது மரியாதையுடன் ஒரு சல்யூட் அடிக்கத் தோன்றுகிறது.

- ரா. பொன்முத்தையா, தூத்துக்குடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x