Published : 09 Oct 2015 10:50 AM
Last Updated : 09 Oct 2015 10:50 AM
`பாவம் மாடுகள்... அவற்றை விட்டுவிடுங்கள்’ தலையங்கம் இந்தியாவில் நடக்கும் உணவு அரசியலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. ஒருகாலத்தில் வேள்விகளில் மாடுகளும் ஆடுகளும் தீக்கு இரையாக்கப்பட்டன. அதை எதிர்த்துத் தொடங்கப்பட்ட விவசாயிகளின் சங்கம்தான் பின்னர் சமணமாக உருவெடுத்தது. ஆக, இன்று பசு வதையை எதிர்ப்பவர்களின் மூதாதையர்கள் வரலாற்றில் மாடுகளையும் ஆடுகளையும் அழித்தொழித்தவர்களே. ஆனால், இவர்கள் மட்டும் புனிதர்கள் என்பதுபோலவும் மற்றவர்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள்போலவும் முத்திரை குத்துவதில் எந்த நியாயமும் இல்லை!
- முனைவர் மூ.பாலசுப்பிரமணியன்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT