Published : 26 Oct 2015 12:35 PM
Last Updated : 26 Oct 2015 12:35 PM

உண்மையான தமிழன்!

கணினியில் முரசு அஞ்சல் என்ற தமிழ் எழுத்துருவை முத்து நெடுமாறன் கண்டுபிடித்தமைக்கு அவர் தமிழின் மீது வைத்துள்ள அளவற்ற அபிமானம்தான் காரணம் என்பதை 'தமிழ்தான் அடையாளம்!' கட்டுரை உணர்த்தியது.

“வெளிநாடுகள்ல இருக்கிற எங்களுக்குத் தமிழ்தான் அடையாளம்” என்று அவர் கூறியதைப் படித்தபோது தமிழின் மேல் வெளிநாடுவாழ் தமிழர்கள் வைத்துள்ள பற்று பிரமிக்க வைத்தது. அந்தந்த நாடுகளுக்கேற்ப அவர்கள் தங்களை மாற்றிக்கொண்டாலும் தாய்மொழியை அவர்கள் ஒருபோதும் விட்டுக்கொடுப்பதில்லை என்பது பெருமைப்படத்தக்க செய்தியாக இருந்தது.

“ஒரு தமிழர்கிட்ட பேசும்போது, இடையில் எங்கேயோ நாலு வார்த்தை ஆங்கிலம் விழுந்துட்டா, நிச்சயம் நான் வெட்கப்படுவேன்” என்று கூறுகிறார் முத்து நெடுமாறன். தமிழ் ஆர்வத்தில் பத்தில் ஒரு பங்கு இங்குள்ள தமிழர்களிடம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

- வீ.சக்திவேல், தே. கல்லுப்பட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x