Published : 14 Sep 2015 11:01 AM
Last Updated : 14 Sep 2015 11:01 AM

தியாகத்துக்குச் சமர்ப்பணம்!

‘கவனம் தேவை எல்லோருக்கும்!’ தலையங்கம் படித்தேன். ராணுவத்தினருக்கு அளித்ததைப் போல மத்திய அரசுப் பணியாளர்களுக்கும் ஓய்வூதியத்தைச் சீரமைக்கக் கோருவது நியாயமற்றது.

அவ்வாறு கொடுக்கப்பட்டால் நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களின் தியாகங்களுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.

பணியின்போது உயிரிழக்கவும் நேரிடும் என்பதை அறிந்தேதான், பணிக்குச் செல்கிறார்கள் ராணுவ வீரர்கள். பணிக் காலம் முடித்து உயிரோடு திரும்புவோம் என்று நிச்சயமில்லாத பணிக்குச் செல்பவர்களுக்குக் கொடுக்கப்படும் சில சலுகைகளையும் எந்தவிதப் பணி ஆபத்தில்லாத மத்திய அரசு ஊழியர்கள் கேட்பது நியாயமில்லை.

இவ்விஷயத்தில், பரந்த மனப்பான்மையுடன் சிந்தித்துதான் அனைத்துத் தரப்பினரும் செயல்பட வேண்டும்.

- வீ.சக்திவேல்,தே.கல்லுப்பட்டி.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x