Published : 15 Sep 2015 10:55 AM
Last Updated : 15 Sep 2015 10:55 AM

பின்தங்கி நிற்கப்போகிறோமா?

பகுத்தறிவும் அறிவியலும்தான் மனிதனை இன்றைய நாகரிக நிலைக்கு உயர்த்தியிருக்கின்றன.

பல்வேறு அறிவியல் கருத்துகளையும் மத அடிப்படைவாதிகள் ஆரம்பத்தில் எதிர்த்தே வந்திருக்கின்றனர்.

ஆனால், அதையும் மீறிக் காலந்தோறும் உலகம் மாறிக்கொண்டும் முன்னேறிக்கொண்டும்தான் இருக்கிறது.

கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்ள இயலாத அடிப்படைவாதிகள், கட்டுரையாளர்களை மட்டுமல்ல, பத்திரிகைகளில் கருத்துகளைத் தெரிவிக்கும் வாசக எழுத்தாளர்களைக்கூட முடக்க நினைக்கின்றனர்.

எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் வசிக்கும் ஊரையும் தெருவையும் எப்போதும் கண்காணித்துக் கொண்டேயிருக்கின்றனர். இத்தகைய சூழலில், சமூகம் பின்னோக்கிச் செல்வதைத் தடுத்து நிறுத்தத் தொடர்ந்து பகுத்தறிவோடு சிந்தித்து ஆக்கபூர்வமாகச் செயல்பட வேண்டியது அனைவருடைய கடமையாகும்.

- மருதம் செல்வா, திருப்பூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x