Published : 12 Aug 2015 10:33 AM
Last Updated : 12 Aug 2015 10:33 AM
அறிவுத்திறனும் செயல்திறனும் மேம்பட தூக்கம் அவசியம் என்பதைப் பொட்டில் அறைந்தாற் போல் சொல்கிறது ‘தூங்க விடுங்கள்’ கட்டுரை.
வகுப்பில் தூங்கும் மாணவர்களின் மீது சாக்பீஸ், மற்றும் அழிப்பானை எறிவது, தலையில் குட்டுவைப்பது, மைதானத்தில் ஓடவிடுவது போன்ற தண்டனைகளால் நிலைகுலையும் மாணவர்கள் மனதில் எந்தப் பாடமும் ஒட்டாது.
சரியான நேரத்தில் இரவு உணவு, மற்றும் தூக்கமென்பதைப் பெற்றோர்களிடமிருந்தே பிள்ளைகள் கற்றுக்கொள்கிறார்கள். தூக்கம் தவிர்த்த குழந்தைகள் மனச் சிதைவுக்கு ஆளாகிறார்கள் என்பது நூற்றுக்கு நூறு உண்மை!
- இல. ஜெகதீஷ்,கிருஷ்ணகிரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT