Published : 06 Aug 2015 10:59 AM
Last Updated : 06 Aug 2015 10:59 AM
குழந்தைகள் எப்போதும் நுகர்ந்தாலே வாடிவிடும் மெல் அனிச்சங்கள்!
நாம் மிகவும் முன்னுரிமை கொடுக்க வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு நாளும் வகுப்பறை களிலிருந்து ஒரு குழந்தையாவது மனம் ஊனமாக்கப்படாமல் வீடு திரும்புகிறதா? இல்லை என்பதே நூறு சதவிகிதம் நிஜம்.
கல்வி வணிக மயமான பின், குழந்தைகளை ஜீவனாகப் பார்க்கும் நிலை போய்விட்டது. ஆசிரியர்களுக்கு, பாடம் நடத்துவது எப்படி என்பதைக் காட்டிலும் குழந்தைகளை நடத்துவது எப்படி என்பதை அதிகம் கற்றுத்தர வேண்டியுள்ளது.
குழந்தைகள் வகுப்பறைகளில் அவமானப்படுத்தப் படுவதும் அடிக்கப்படுவதும் வன்கொடுமையாகக் கருதப்பட்டு, தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். போட்டிகள் என்ற பெயரில் பலரைத் தோல்வியாளர்களாகக் காட்டும் நடைமுறையும் தவிர்க்கப்படுதல் நலம்.
பி.எல். சுந்தரம் எம்.எல்.ஏ, பவானி சாகர் தொகுதி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT