Published : 13 Aug 2015 10:55 AM
Last Updated : 13 Aug 2015 10:55 AM
வனப் பாதுகாப்பு, விலங்குகளின் பாதுகாப்பு என்ற பெயரில் ஆதிவாசிகளின் பகுதிகளைக் கைப்பற்றி, ஏறக்குறைய அவர்களை அடிமைப்படுத்தி விலங்குகளைவிடக் கேவலமாக நடத்திவருகின்றோம்.
பின்தங்கிய நிலையில் இருக்கும் அவர்களை முன்னேற்றுவதாய்க் கூறிக்கொண்டு, இயற்கையின் மீதுள்ள அவர்களுடைய உரிமைகளைப் பறித்து, பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துத் தந்தோம். ஆனால், அவர்களுக்குத் தேவையான உணவு, நீர், இருப்பிடம், மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை வசதிகளைக்கூட வழங்காமல் இழுத்தடித்துவருகிறோம்.
உண்மையில், இயற்கையை ஆதிவாசிகளிடம் விட்டுவிட்டால், நம்மைவிட மிகச் சிறப்பாக அவற்றைப் பாதுகாப்பதோடு, நிம்மதியாகவும் சுதந்திர உணர்வோடும் வாழ்வார்கள். ஆக, ஆதிவாசிகள் நம்மிடம் எதிர்பார்ப்பது உதவியை அல்ல, இயற்கையோடு இணைந்து வாழ்வதற்கான உரிமையை மட்டுமே!
- கேப்டன் யாசீன், திண்டுக்கல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT