Published : 06 Aug 2015 10:58 AM
Last Updated : 06 Aug 2015 10:58 AM

கி.ரா-வுக்குப் பாராட்டு

மண் மணம் பகுதியில் ‘மனு சங்க…’ கட்டுரை படித்தேன். என்ன ஒரு கைமணம்! மனிதர்களைப் பற்றி எழுத தனிக் கவனம் வேண்டும்.

அதை கி.ரா. சரியாகச் செய்திருக் கிறார். தோப்பு, காவல்காரர்களைப் பற்றி இன்றைய தலைமுறையினர் அறியமாட்டாதவர்களாக இருப்பினும், இவருடைய எழுத்தைப் படித்தபின், அவர்களைப் பற்றி ஓரளவு கற்பனை செய்துகொள்ள முடியும். வாழைத் தோப்பில், இரண்டு களவாணிப் பயல்கள் மீசை காவல்காரரை ஏமாற்றி, இரண்டு வாழைப்பழத் தார்களை எடுத்துச் சென்றதுமல்லாமல், அவரது கிடா மீசையையும் வெட்டிய நிகழ்வை இதைவிடச் சுவாராசியமாக வேறு எவராலும் சொல்ல முடியாது.

மண்ணின் மணம் மாறாமல் தன் எழுத்தின் வழி பரிமாறியிருக்கும் கி.ரா-வுக்குப் பாராட்டுகள்!

- ஜீவன்.பி.கே. ,கும்பகோணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x