Published : 29 Aug 2015 10:52 AM
Last Updated : 29 Aug 2015 10:52 AM
‘தெரசா எனும் உந்துசக்தி’ கட்டுரை படித்தேன். அன்னை தெரசா 20-ம் நூற்றாண்டின் அற்புத மனிதர் மட்டுமல்ல, எல்லா காலத் துக்குமான அற்புத மனிதர்.
தனது சாரிட்டிக்காக நிதி திரட்டுவதற்காக கொல்கத்தாவில் ஒவ்வொரு கடையாக நிதி கேட்டு சென்றார் அன்னை. ஒரு கடைக்காரர் ஏதுவும் தராததோடு அன்னையின் கையில் வெற்றிலைப் பாக்கு எச்சிலை உமிழ்ந்தார். அன்னை தெரசா ‘‘எனக்கு இதனைத் தாங்கள் கொடுத்ததற்கு நன்றி.
அங்கு விடுதியில் ஏழைக் குழந்தைகள் பசியோடு இருக்கிறார்கள். அவர் களுக்கு ஏதாவது கொடுங்கள்” என்று கேட்க, கடைக்காரர் அன்னை யின் பொறுமையில் வியந்து, தனது செய்கைக்கு வருந்தி கல்லாவிலிருந்த தொகை அனைத்தையும் அளித்துள்ளார். பொறுமையின் சிகரம் தெரசா!
- வீ. சக்திவேல்,தே.கல்லுப்பட்டி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT