Published : 14 Jul 2015 10:44 AM
Last Updated : 14 Jul 2015 10:44 AM

நீராதாரத்தில் கை வைக்காதீர்

சென்னை நகர மக்களுக்கு நீராதார மாக இருக்கும் பல ஏரிகளில் போரூர் ஏரியும் ஒன்று.

சென்னை ராமச்சந்திரா பலகலைக்கழகத்துக்கு போரூர் ஏரிப் பகுதியில் ஏற்கெனவே 17 ஏக்கர் நிலம் அளிக்கப்பட்டது.

மேலும், அது 15 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்திருக்கிறது. சுமார் 800 ஏக்கர் பரப்பளவாக இருந்த போரூர் ஏரி, பல ஆக்கிரமிப்புகளால் தற்போது 250 ஏக்கர் பரப்பளவாகச் சுருங்கிவிட்டது.

இதுபோன்ற செய்திகள் சென்னை நகர மக்களையும் சமூக ஆர்வலர்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. நீர் ஆதாரமாக இருக்கும் ஏரிப் பகுதியின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை அரசு உடனடியாக மீட்க வேண்டும். மேலும் ஆக்கிரமிக்கப்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x