Published : 02 Jul 2015 10:56 AM
Last Updated : 02 Jul 2015 10:56 AM

திமுகவைத் தள்ளிவைத்துவிட்டார்கள்

திமுக தேர்தலைப் புறக்கணித்த நிலையில், ஓட்டுப் பதிவு சதவிகிதம் குறைந்திருக்க வேண்டும்.

அல்லது இவ்வளவு ஓட்டு பதிவான நிலையில், திமுகவின் ஓட்டு கம்யூனிஸ்ட்களுக்குப் போயிருக்க வேண்டும். ஆனால், திமுகவின் ஓட்டுகள் அதிமுகவுக்குப் போயிருக்கிறது.

திமுகவில் சிலர் பென்னாகரம் தேர்தலை உதாரணம் காட்டலாம். அந்தத் தேர்தலில் அதிமுக, பாமக உள்ளிட்ட அன்றைய எதிர்க் கட்சிகள் கவுரவமான ஓட்டுகளை வாங்கிக் களத்தை உறுதிப்படுத்தினர். இப்போது திமுக களத்தையும் காலத்தையும் இழந்து நிற்கிறது.

ஒன்றைச் சொல்ல வேண்டும். திமுக ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை இன்று வரை நிறைவேற்றவில்லை. ஆனால், அதைச் சொல்லியே இதுவரை காலம்தள்ளிவிட்டது. அதை மக்கள் புரிந்துகொண்டதால் அவர்கள் திமுகவைத் தள்ளிவைத்துவிட்டார்கள்.

- ஜானகிராமன்,இணையம் வழியாக...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x