Published : 03 Jul 2015 10:56 AM
Last Updated : 03 Jul 2015 10:56 AM

கண்ணதாசன் வாழ்த்திய கணபதி

மாயா பஜார் இணைப்பிதழில், குழந்தைக் கவிஞர் செல்லகணபதிக்கு பாலசாகித்திய விருது கிடைத்துள்ள செய்திக் கட்டுரை படித்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பாவைத் தொடர்ந்து குழந்தைகளுக்கான பாடல் எழுதுவதில் முக்கியமானவர். குழந்தைகள் பயன்படுத்தும் சின்னச் சின்ன வார்த்தைகளைக் கொண்டு சந்த நயத்துடன் நல்லொழுக்கக் கருத்துகளையும் சிறுவர் மனதில் நுழைத்த பெருமை

இவருக்கு உண்டு. கவிஞர் கண்ணதாசனும் செல்ல கணபதியை வாழ்த்தியிருக்கிறார் என்பதை நினைவூட்டுவது இங்கு பொருத்தமாக இருக்கும்.

- கூத்தப்பாடி கோவிந்தசாமி, தருமபுரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x