Published : 10 Jul 2015 10:48 AM
Last Updated : 10 Jul 2015 10:48 AM

விசாரணை கமிஷன் தேவை

வியாபம் முறைகேடு அதிர வைக்கிறது. இது தொடர்பான பெண் இறந்தபோது, அவர் பின்னணி தெரியாத நிலையில், உஜ்ஜயினியில் செய்த பிரேதப் பரிசோதனை அறிக்கை, அது கொலை என்று கூறியது.

81 நாட்கள் கழித்து, அந்தப் பெண் வியாபம் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர் என்று தெரிந்தபின், போபாலில் நடந்த இரண்டாவது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தற்கொலை என்று மாற்றப்பட்டுள்ளது.

இதில் கவனிக்க வேண்டியது இரண்டாவது பரிசோதனை செய்த மருத்துவர், பெண்ணின் உடலைப் பார்க்காமல் புகைப்படத்தைப் பார்த்து அறிக்கை அளித்தாராம்.

ஆகவே உச்ச நீதிமன்றம், சிவராஜ் சிங் சவுகானை முதல்வர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, தனது மேற்பார்வையில் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்.

அறிக்கை தர அதற்குக் காலக்கெடு விதிக்கப்பட வேண்டும்.

செந்தில், இணையம் வழியாக…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x