Published : 28 Jul 2015 10:37 AM
Last Updated : 28 Jul 2015 10:37 AM
தங்கர் பச்சானின் ‘கொண்டாட்டம் யாருக்கு?’ என்ற கட்டுரை நியாயமான ஆதங்கத்தை வெளிப் படுத்தியிருக்கிறது.
சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும், மூதாதையரின் வீடுகளில் வசிக்கும் நாம் சொந்த வீடு கட்டப் போராட வேண்டியிருக்கிறது. பிள்ளைகளைப் படிக்கவைப்பதா? திருமணத்துக்கு நகை வாங்குவதா? இடியும் நிலையிலிருக்கும் வீட்டை மாற்றிப் புதிய வீடு கட்டுவதா என்று நாள்தோறும் சிந்திக்கும் சூழலில், ஒரே மனிதருக்குப் பல வீடுகள் இருப்பது நீதியில்லை.
ஒருபக்கம் சுற்றுச்சுழலுக்குப் போராடுவது போல் நாடகமாடிவிட்டு, ஆடம்பர பங்களாக்கள் உருவாக்க ஆற்று மணலைச் சுரண்டுவதும் கதவுகளுக்காக மரங்களை வெட்டுவதும், பளிங்குத் தரைக்காக பூமியைப் பிளப்பதும் நம்மை நாமே அழித்து கொள்வதுபோல் இருக்கிறது. எளிமையாக வாழ்வது ஏளனத்துக்கு உரியதல்ல.
- கூத்தப்பாடி மா. கோவிந்தசாமி,தருமபுரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT