Published : 15 Jul 2015 10:49 AM
Last Updated : 15 Jul 2015 10:49 AM

கேரளத்தின் பிடிவாதம்

முல்லை பெரியாறு அணைகுறித்த ‘தி இந்து’வின் கட்டுரை பல்வேறு உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளது.

முல்லை பெரியாறு அணை தமிழக மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு இன்றியமையாததாக இருக்கிறது. பல்வேறு ஆய்வுகளும், அணை ஆய்வுகுறித்த நிபுணர்களின் கருத்துகளும் அணை பலமாக உள்ளது, 152 அடி வரை நீரைத் தேக்கலாம் என்று சொல்கிறது.

அதைப் போல உச்ச நீதிமன்றமும் அணையின் கொள்ளளவை 142 அடிக்கு உயர்த்தலாம் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால், கேரள அரசு இவையெல்லா வற்றையும் நிராகரித்துப் பிடிவாதம் செய்வது, ஒரே நாட்டுக்குள் இருக்கும் இரு மாநிலங்களுக்கு உகந்தது அல்ல.

- நி. ஒஜிதுகான், முத்துப்பேட்டை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x