Published : 15 Apr 2015 11:58 AM
Last Updated : 15 Apr 2015 11:58 AM

புகைப்படக் கல்வெட்டுகள்

தங்கர்பச்சான் பலரது எண்ணங்களையே இந்த வாரம் கட்டுரையாக (காலம் சொல்லும் கதைகள்) நெய்திருக்கிறார்.

அந்தக் காலத்தில் புகைப்படம் என்பது ஆடம்பரமாகவும், அனாவசியச் செலவாகவும் கருதப்பட்டதாலேயே பெரும்பாலானோர் புகைப்படம் எடுப்பதைத் தவிர்த்தனர். அதையும் மீறி எடுக்கப்பட்ட கருப்பு - வெள்ளைப் புகைப்படங்கள் இன்று மக்களின் இதயத்துடிப்பாகிவிட்டது.

ஒவ்வொரு புகைப்படமும் கடந்த காலத்தை வாரிச் சுருட்டிக்கொண்டு வந்து நம் முன்னே போட்டுவிடுகிறது.

நம் தாத்தா, பாட்டி, மாமா, அத்தை மற்ற உறவுகள், அவர்களுடன் நாம் பகிர்ந்துகொண்ட நிகழ்வுகள் தானாகவே நம் மனதில் தோன்ற... நாம் மறுபடியும் அவர்களுடன் வாழ்கிறோம்; மறுபிறவி எடுத்தவர்களாகிறோம். நம்மை மறுபிறவி எடுக்கவைக்கும் ஒவ்வொரு புகைப்படமுமே ஒவ்வொரு கல்வெட்டுதான்.

- ஜே. லூர்து,மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x