Published : 09 Mar 2015 11:57 AM
Last Updated : 09 Mar 2015 11:57 AM

நலம் குன்றிய சமுதாயம்

70 % மாணவிகள் காலையில் சாப்பிடுவதில்லை என்ற தகவல், தற்போதைய கல்விமுறை பெயருக்குப் பின்னால் போடும் தகுதிகளாகத்தான் இருக்கின்றனவே தவிர, அறிவை விருத்திசெய்யும் முறையில் அமையவில்லை என்பதையே காட்டுகிறது.

காலை உணவைக் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், காலை நேரப் பதற்றம் காரணமாகச் சாப்பிடாமல் செல்கிறார்கள். இதற்கு பெற்றோரும், கல்லூரி நிர்வாகமும், அரசும் தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

மாணவிகளின் இந்நிலை தொடருமானால், உடல்நலம் குன்றிய சமுதாயம் விரைவில் உருவாக வாய்ப்பு ஏற்படும்.

- எம்.ஆர். லட்சுமிநாராயணன்,கள்ளக்குறிச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x