Published : 09 Mar 2015 12:02 PM
Last Updated : 09 Mar 2015 12:02 PM

ஆணாதிக்க மனத்தால்தான் நமக்குத் தலைக்குனிவு

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியத் தலைநகரில் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்குள்ளாகி கொல்லப்பட்ட பெண் நிர்பயா.

இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐவரில் ஒருவரான முகேஷ் சிங்கின் பேட்டி மிக ஆணவத்துடன் வெளிப்பட்டுள்ளது.

மேலும், குற்றத்தை நியாயப்படுத்துவதுபோலவும் உள்ளது. இதில் ஆண் என்னும் திமிரே வெளிப்பட்டுள்ளது. ‘ஆவணப்படத்தால் அல்ல, ஆணாதிக்க மனத்தால்தான் நமக்குத் தலைக்குனிவு’ என்று எழுத்தாளர் வாஸந்தி குறிப்பிட்டிருப்பதை மறுக்க முடியாது. பண்பாடு், கவுரவம், மானம் ஆகிய பண்புகள் ஆண்கள் கையிலும் உள்ளது என்பதும் புரிந்துகொள்ளப்ப்பட வேண்டிய ஒன்று.

- பொன். குமார், சேலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x