Published : 13 Mar 2015 10:50 AM
Last Updated : 13 Mar 2015 10:50 AM

மக்களின் குரல்

சமூகத்தின் மீது தனக்கு இருக்கின்ற, ஒவ்வொருவரின் அக்கறையின் குரலாக ஒலிக்கின்றது இயக்குநர் தங்கர்பச்சானின் எழுத்துக்கள்.

‘பள்ளிக்கூடம்’ திரைப்படத்துக்குப் பிறகு, பல்வேறு ஊர்களில் மூடப்படும் நிலையிலிருந்த பல பள்ளிகள் முன்னாள் மாணவர்களால் உயிர் பெற்றிருப்பதுகுறித்த அவரின் பதிவு, சரியான ஒரு தீர்வு.

கருகும் பிஞ்சுகள்குறித்த அவரின் ஆதங்கம் எல்லோரின் மன வெளிப்பாடாக விளங்குகிறது. எவையெல்லாம் அவர்களின் குடும்ப மகிழ்ச்சிக்கும் மன அமைதிக்கும் காரணிகளோ அவற்றையெல்லாம் அவர்களிடமிருந்து பறித்துவிட்ட அதிகாரக் கூட்டத்துக்கு அந்தப் பிஞ்சுகளின் பாச உணர்வையும் எதிர்காலம் குறித்த வினாவையும் யார் உணர்த்துவது?

- அருணாசுந்தரராசன், மானாமதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x