Published : 06 Mar 2015 10:57 AM
Last Updated : 06 Mar 2015 10:57 AM

மனநோய் குணப்படுத்தக் கூடியதே

ஜி. ராமானுஜம் எழுதிய ‘யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது மனம்?’ கட்டுரை மனதைப் பற்றிய சிந்தனைக் கதவை திறந்துவிட்டது.

சாதாரண நிலையில் இருக்கும் மனச்சோர்வைகூட பைத்தியமாகப் பார்க்கும் மனநிலை நம்மில் பலரிடம் இருக்கிறது. இதனால்தான் சொந்த ஊர்க்காரர்களுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்று வெளியூரில் உள்ள மனநல மருத்துவரை அணுகுகிறார்கள் சிலர்.

மன இறுக்கம், மனச் சோர்வு போன்ற பிரச்சினைகளைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை. உடல் நோயைப் போல அதுவும் ஒரு நோய்தான். முறையான சிகிச்சை செய்தால் எளிதில் குணப்படுத்த முடியும் என்ற விழிப்புணர்வை நம் மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டியது மிக மிக அவசியம்.

- கேப்டன் யாசீன்,சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x