Published : 20 Jun 2015 10:41 AM
Last Updated : 20 Jun 2015 10:41 AM

ஜனநாயகத்தில் கரும்புள்ளி

தனது நிழல் உயர் சாதி வகுப்பினர்மீது பட்டதற்காக அந்த தலித் சிறுமி பட்ட கொடுமை நாம் இன்னமும் நாகரிக சமுதாயத்தில்தான் வாழ்கிறோமா என்று நம்மை வெட்கித் தலை குனிய வைக்கிறது. அரசியல் விடுதலையோடு, சமூக விடுதலையும் வேண்டும் என்று காந்தி ஏன் போராடினார் என்பதன் உண்மைப் பொருளும் இப்போது தெளிவாகிறது.

உலகின் மாட்சிமை மிக்க ஜனநாயக அமைப்பு என்று நம்மை நாமே பாராட்டிக்கொள்வதில் ஏதேனும் பொருள் இருக்கிறதா?

பசிக்கும் வறுமைக்கும் கல்லாமைக்கும் நிகரான - ஏன் அதை விடவும் ஒருபடி கூடுதலான இந்தத் தீண்டாமை ஒழியும் வரை நமது ஜனநாயகத்தின் மீது விழுந்த கரும்புள்ளியை யாராலும் அகற்ற முடியாது.

- கே.எஸ். முகமத் ஷூஐப், காயல்பட்டினம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x