Published : 19 May 2022 08:23 AM
Last Updated : 19 May 2022 08:23 AM

ப்ரீமியம்
பட்டமளிப்பு விழாக்கள் அரசியல் மேடைகள் அல்ல!

அண்மையில் நடந்த பட்டமளிப்பு விழாக்கள் இரண்டும் கல்வித் துறைக்கு வெளியே அரசியல் வெளியிலும் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. கோவை பாரதியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், ஆளுநரும் உயர் கல்வித் துறை அமைச்சரும் கலந்துகொண்ட நிலையில், அவர்கள் இருவரது உரைகளும் கருத்துமுரண்களை விவாதிக்கும் களமாக விழா மேடையை மாற்றிவிட்டன. தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும் என்று தமது உரையில் குறிப்பிட்டார் உயர் கல்வித் துறை அமைச்சர்.

ஆனால், இந்தி படிப்பதால் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்ற வாதத்தை மறுப்பதற்கு, வடமாநிலங்களிலிருந்து வந்து தமிழ்நாட்டில் பானி பூரி விற்பவர்களை உதாரணம் காட்டியதைத் தவிர்த்திருக்கலாம். எனினும், மொழித் திணிப்பை எதிர்க்கிறோமேயன்றி எந்தவொரு மொழியையும் விருப்பத்துடன் படிப்பதை எதிர்க்கவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார். உயர் கல்வித் துறை அமைச்சரை அடுத்துப் பேசிய ஆளுநர், தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படுவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என்று பதிலளித்தார். பல்கலைக்கழக மேடைகள் அரசியலுக்கு அப்பாற்பட்டவையல்ல. அரசியல் தலைவர்கள் பலரின் பட்டமளிப்பு விழா உரைகளும் இன்றளவும் இலக்கிய மதிப்போடு நினைவுகூரப்படுகின்றன. ஆனால், அரசமைப்பின் முக்கியமான பொறுப்புகளை ஏற்றிருப்பவர்கள் தங்களுக்கு இடையேயான ஓர் அரசியல் விவாதத்துக்குப் பட்டமளிப்பு விழாவைப் பயன்படுத்தியதைத் தவிர்த்திருக்கலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x