Published : 21 May 2023 08:54 AM
Last Updated : 21 May 2023 08:54 AM

ப்ரீமியம்
இந்தியாவின் எதிர்காலம் ஊர்வனவற்றைச் சார்ந்ததே! - காட்டுயிர்ப் பாதுகாவலர் ரோமுலஸ் விட்டேகர் நேர்காணல்

ரோமுலஸ் விட்டேகர். இந்திய ஊர்வனவற்றில் ஏதாவது ஒன்றை நிறுத்திக் கேட்டால் - அவற்றுக்குப் பேசும் திறன் இருந்திருந்தால் - இந்தப் பெயரை அவை போற்றியிருக்கும். பாம்பைக் கண்டவுடன் உடனே அடிப்பதற்குக் கம்பைத் தேடும் நமது மனோபாவத்தில் இன்றைக்கு ஓரளவு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணமும் விட்டேகர்தான். திரைப்பட நடிகர்கள், கிரிக்கெட் வீரர்களைப் போலக் கொண்டாடப்பட்டிருக்க வேண்டியவர்.

காரணம், எண்பதைத் தொடும் இந்த வயதிலும் இந்திய ஊர்வனவற்றைக் குறித்த ஆராய்ச்சி, பாதுகாப்புப் பணிகளில் இடையறாது ஈடுபட்டுவருகிறார். இயற்கை பாதுகாப்புச் செயல்பாடுகளில் அவரது அனுபவம் 55 ஆண்டுகள்.
பிறப்பால் அமெரிக்கராக இருந்தாலும் தமிழ்நாடுதான் ரோமுலஸ் விட்டேகரின் முக்கியப் பரிசோதனைகள் நடைபெற்ற முதல் களம். 1969இல் சென்னை சேலையூரில் சிறிய அளவில் தொடங்கப்பட்டு, பிறகு கிண்டி சிறுவர் பூங்கா அருகே மாற்றப்பட்ட சென்னை பாம்புப் பண்ணை, மாமல்லபுரம் அருகேயுள்ள சென்னை முதலைப் பண்ணை, கருநாகங்களுக்காக (King Cobra) ஆகும்பே மழைக்காட்டு ஆராய்ச்சி நிலையம், அந்தமான் நிகோபார் தீவுகள் சுற்றுச்சூழல் குழு எனக் காட்டுயிர் ஆராய்ச்சி, பாதுகாப்பு சார்ந்து முன்னோடிப் பணிகளை அவர் ஆற்றியுள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x