Published : 10 Jul 2022 06:00 AM
Last Updated : 10 Jul 2022 06:00 AM
காரைக்கால் சாந்தி தியேட்டரில் ‘தெய்வம்’ திரைப்படம் வெளியாகியிருந்த நேரம். எங்கள் பகுதியின் எல்லாத் தெருப் பெண்களும் ‘செகண்ட் ஷோ’வுக்கும் குழந்தைகளுடன் கூட்டம்கூட்டமாகச் சென்று பார்த்துவந்தனர். அதில் இடம்பெற்ற ‘மருதமலை மாமணியே முருகையா’ பாடல் குறித்து ஊரே பேசிக்கொண்டது. நானும் அந்தப் படத்தைப் பார்த்தேன். சிறுவனாக இருந்த எனக்கு அந்தப் பாடலின் ஆதாரமாக இருந்த ராகத்தின் பெயர் தெரியாது.
இளமையின் பரவசத்துடன் காரைக்கால் டைமண்ட் தியேட்டரில் ‘இளமைக் காலங்கள்’ பார்த்தபோது, அதில் இடம்பெற்றிருந்த ‘இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம் பொழியும்’ என்கிற பாடல் என்னை என்னவோ செய்தது. பாடலின் சரணத்தில் வரும் ‘நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும் மேனி எங்கும் பூ வசந்தம். கட்டிக் கரும்பு தொட்டவுடன் சாறாகும்’ என்கிற வரிகளில் நின்று சுழன்றன ஆக்ஸிடோசின் உணர்வுகள்! அப்போதும் தெரியாது, அந்தப் பாடல் என்ன ராகம் என்று!
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT