Published : 05 Jun 2022 10:04 AM
Last Updated : 05 Jun 2022 10:04 AM
தஞ்சாவூருக்கு அருகில் இருக்கிறது மெலட்டூர். ஊரின் பெயரைச் சொன்னாலே பாகவத மேளா மட்டும்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். அதுவே அந்த ஊரின் அடையாளமாக ஆகியிருக்கிறது. பாகவத மேளா என்பது பழமையான நாட்டிய நாடக வகையைச் சேர்ந்தது. விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் சரிவுக்குப் பிறகு ஆந்திரத்திலிருந்து 16-ம் நூற்றாண்டில் தஞ்சாவூருக்கு வந்த 500-க்கும் மேற்பட்டோர் இங்கேயே உருவாக்கி வளர்த்தெடுத்த கலை. இதில் தமிழ் மண்ணின் தொல்கலையின் தடங்களைக் காணலாம். தஞ்சாவூருக்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் இசைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், கவிஞர்கள். அப்போது தஞ்சையை ஆண்ட அச்சுதப்ப நாயக்கர் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடு, மாடுகள், நிலங்கள் கொடுக்கப்பட்டன. மெலட்டூரில் பல கலைஞர்கள், அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள். பரதம் காசிநாதையா, பரதம் வீரபத்ரய்யா என்று பலரையும் சொல்லலாம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT