Published : 17 Jan 2019 10:16 AM
Last Updated : 17 Jan 2019 10:16 AM

360: ரூ.2,140 கோடி கடனுதவி: இலங்கையைக் குறிவைக்கும் சீனா

இலங்கைக்கு சீனா ரூ. 2,140 கோடி கடனுதவி வழங்குவதாக, இலங்கை அமைச்சர் எரான் விக்ரமரத்னே தெரிவித்திருக்கிறார்.

இந்தத் தொகை, ரூ.7,000 கோடியாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிகிறது. இலங்கையில் கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் காரணமாக பொருளாதாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதால் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலையில் சீனா இந்தக் கடனுதவியை அளிப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ரூ.2,800 கோடி மதிப்பில் இந்திய ரிசர்வ் வங்கியிடம் பரஸ்பர ஒப்பந்தம் போட்டிருக்கும் இலங்கை, அந்தத் தொகையை ரூ.7,000 கோடியாக அதிகரிக்கும் பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x