Published : 18 Jan 2024 06:16 AM
Last Updated : 18 Jan 2024 06:16 AM

ப்ரீமியம்
மொழிபெயர்ப்பின் கோட்பாடு ஆசிரியரின் கருத்தை நிலைநிறுத்துவதுதான்! - மொழிபெயர்ப்பாளர் ஜனனி கண்ணன் நேர்காணல்

எழுத்தாளர் பெருமாள்முருகனின் ‘ஆளண்டாப் பட்சி’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘Firebird’, 2023ஆம் ஆண்டுக்கான ஜேசிபி இலக்கிய விருதை (JCB Literary Prize) வென்றது. இந்நாவலின் மொழிபெயர்ப்பாளரான ஜனனி கண்ணன், அமெரிக்காவில் வசிக்கும் கட்டிடக் கலைஞர். பாட்டு, மாரத்தான் ஓட்டம் உள்ளிட்ட ஈடுபாடுகளையும் கொண்டிருக்கும் ஜனனிகண்ணனுடனான உரையாடலின் பகுதிகள்:

மொழிபெயர்ப்பு சார்ந்த ஈடுபாடு உங்களுக்கு எப்படி, எப்போது தோன்றியது? - நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். என்றாலும், கட்டிடக்கலை படிப்பதற்காக குஜராத்தின் அகமதாபாத்தில் தங்கியிருந்த காலகட்டத்தில்தான் தமிழ் மீது எனக்கு ஈடுபாடு அதிகரித்தது; மேற்படிப்புக்காக அமெரிக்காவின் நியூ யார்க் நகருக்குச் சென்றபோது தமிழ் ஆர்வம் தீவிரமடைந்தது. பல நூல்களைப் படித்துவந்ததன் விளைவு, சில சிறுகதைகளை மொழிபெயர்க்கும் அளவுக்குத் தூண்டியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x