Last Updated : 24 Sep, 2023 07:53 AM

 

Published : 24 Sep 2023 07:53 AM
Last Updated : 24 Sep 2023 07:53 AM

ப்ரீமியம்
எது சிறார் இலக்கியம்: தொடரும் விவாதம்

‘ஆயிஷா நூலுக்குப் பிறகுதான் நவீன சிறார் இலக்கியத்தின் எழுச்சி தொடங்கியது’ என இலக்கியக் கூட்டங்களில் பேசப்படுவதையும் கட்டுரைகளில் எழுதப்படுவதையும் பரவலாகப் பார்க்க முடிகிறது. பல்வேறு பதிப்பகங்களின் மூலம் லட்சக்கணக்கான பிரதிகள் விற்ற ‘ஆயிஷா’, பல்லாயிரம் ஆசிரியர்களின் சிந்தனை, செயல்பாடுகளை மாற்றியிருக்கிறது. கல்வி குறித்த புரிதல்களை, சலனங்களை, விவாதங்களை ஏற்படுத்தி வருகிற நூல் அது. ‘ஆயிஷா’ நூலை இதுவரையிலும் வாசிக்காத ஒரு ஆசிரியரைப் பற்றிய நம் மதிப்பீடே வேறு மாதிரியாக இருக்கும்.

ஆனாலும் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக, புரிதலுக்காக அல்லது குழந்தைகளிடம் ஏதேனும் விளைவுகளை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் எழுதப்பட்டதல்ல அது. ‘ஆசிரியர்களிடமிருந்து எங்கள் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்’, ‘அவரவர் அறிவைப் பயன்படுத்த அனுமதியுங்களேன்’ என்கிற அந்நூலின் கோரிக்கைகள் யாரை நோக்கியவை? யாரிடம் மாற்றம் கோருபவை? குழந்தைகளின் கல்வியைத் தீர்மானிக்கிற அமைப்புகளை நோக்கியவை. அதில் அங்கம் வகிக்கிற அனைவரையும் நோக்கியவை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x