Published : 18 Aug 2023 06:13 AM
Last Updated : 18 Aug 2023 06:13 AM
‘பெண் சிசுக் கொலைக்கு முற்றுப்புள்ளி எப்போது?’ என்னும் தலைப்பில் ஆகஸ்ட் 8 அன்று வெளியான தலையங்கம் வாசித்தேன். ‘ஆண் என்றால் வரவு, பெண் என்றால் செலவு என்கிற எண்ணம் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் மக்கள் மனதில் வேரோடிப் போயிருப்பது இந்த அவலத்துக்கு ஒரு காரணம்’ என்று தலையங்கம் சொல்கிறது. அதாவது, இது பண்டைய சமுதாயத்தின், அநாகரிக அவலம், இன்றைய நவீன, நாகரிக இந்தியாவில் எப்படித் தொடரலாம் என்கிற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
உண்மையில், தமிழ்நாட்டில் பெண் சிசுக் கொலை அதிகம் நடப்பதாக அறியப்பட்ட சில சமுதாயங்களில் இது பாரம்பரியப் பழக்கம் அல்ல; சுதந்திரத்துக்குப் பின் ஏற்பட்ட விபரீத வீழ்ச்சி. பாலின விகிதம் (1,000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்ற கணக்கு) பெரும் சரிவடைந்தது 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான். இப்பிரச்சினை குறித்து 30 ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்டிருந்தேன். அதன் அடிப்படையில் சில கட்டுரைகளை அவ்வப்போது எழுதிவந்திருக்கிறேன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT