Published : 30 Jul 2023 08:15 AM
Last Updated : 30 Jul 2023 08:15 AM
மாலை நேர ஒளியில், தலைமுடியின் விளிம்பு தங்கக் கம்பிகளாக மின்ன, மலர்ந்த முகத்துடன் நிற்கும் ஒரு பெண்ணின் உருவத்தை, திறமைவாய்ந்த எந்த ஓவியராலும் வரைந்துவிட முடியும்தான். ஆனால், அது மாருதியின் ஓவியத்துக்கு நிகராகிவிட முடியாது. கல்லூரி மாணவி, பணிக்குச் செல்லும் பெண், கல்யாணக் கனவுகளுடன் காத்திருக்கும் இளம் பெண், ஈரம் சொட்டும் தலையில் சுற்றப்பட்ட துண்டுடன் வெட்கப் புன்னகை விரிக்கும் புதுமணப் பெண் என மாருதி வரைந்த பெண்களின் முகங்கள், ஏராளமான பெண்களின் அழகு ரகசியத்துக்கும், ஆண்களின் திருமண ஆசைகளுக்கும் தூண்டுதல்களாக, வடிகால்களாக இருந்திருக்கின்றன.
ஆழ்ந்த அவதானிப்பின் மூலம் வெவ்வேறு விதமான முகங்களை நினைவின் அலமாரிக்குள் அடுக்கிவைத்திருக்கும் ஓர் ஓவியன், தனக்கு உணர்த்தப்படும் சூழலுக்கு ஏற்ற ஒரு முகத்தை, மெலிதாகக் கொய்யப்படும் பூவைப் போல தூரிகையில் ஏந்தித் தர வல்லவன். அப்படியான கலைஞர்களின் தலைமகன் மாருதி. வரையப்படும் உருவம் எந்த இடத்தில், எந்த நேரத்தில், எந்தப் பின்னணியில், என்ன மனநிலையில் இருக்கிறது என்பதை, ஒரு நொடியிலேயே பார்வையாளனுக்குக் கடத்தும் திறன் கொண்டிருந்த மகா கலைஞன் அவர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT