Published : 21 Mar 2023 06:53 AM
Last Updated : 21 Mar 2023 06:53 AM

ப்ரீமியம்
தேர்வெழுதாத மாணவர்கள்: எப்படி நிகழ்ந்தது தவறு?

தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் 2 பொதுத் தேர்வை எழுத ஏறத்தாழ 50 ஆயிரம் மாணவர்கள் வருகை தராத விஷயம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனா பொதுமுடக்கத்திலிருந்து மீண்ட பிறகு சென்ற ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்வில், ஏறத்தாழ 30,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது.

இந்த ஆண்டு 8 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 2 பொதுத் தேர்வு எழுதுகின்றனர். வழக்கமாக, தேர்வு வருகைப் பதிவின்மை 3% என்ற அளவிலேயே இருக்கும். ஆனால், இந்த ஆண்டு ஏறத்தாழ 6% மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. கரோனா பரவலால் பள்ளிக் கல்வியில் ஏற்பட்ட பாதிப்பு, சென்ற ஆண்டு இறுதித் தேர்வுகளிலும் பிரதிபலித்தது. பலர் பள்ளிப் படிப்பையே கைவிட்டுவிட்டனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x