Published : 03 Jan 2023 06:47 AM
Last Updated : 03 Jan 2023 06:47 AM

ப்ரீமியம்
நீரா கொள்கையில் வேண்டும் மாற்றம்!

பா.சந்திசேகரன்

இந்தியாவின் தேங்காய் உற்பத்தியில் 90% தென்னிந்தியாவில்தான் நடைபெறுகிறது. இந்தியாவில் தென்னை உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாம் இடமும் (13%), மொத்த தென்னை சாகுபடி நிலப்பரப்பளவில் முதலிடமும் (36%) வகிக்கிறது. இந்தியாவில் மொத்த தென்னை உற்பத்தியில் சுமார் 9% இளநீராகப் பயன்படுத்தப்படுகிறது; மீதி 91% முழு தேங்காயாகச் சந்தைக்கு வருவது வீடு, சமயம், தொழில்சார் பயன்பாடுகளுக்கும் தேங்காய் எண்ணெய்க்கும் இதர மூலப் பொருள்களுக்கும் செல்கிறது.

தென்னையிலிருந்து பெறப்படும் நீரா பானம் (தெளுவு, பதநீர்), தென்னைக் குருத்திலிருந்து இயற்கையான முறையில் எடுக்கப்படும் சத்துள்ள இனிப்பான குடிநீராகும்; இது கலப்படமற்ற, மது-கள் சாயம் முற்றிலும் இல்லாத பானமாகும். ஆனால், நீரா பானத்தைப் பற்றிய விழிப்புணர்வு பொதுவாக இல்லை. இந்தியாவில் தேங்காய் அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டாலும், தென்னையும் அதுசார்ந்த மதிப்புக்கூட்டிய பொருட்களான நீரா சர்க்கரை, கருப்பட்டி, கற்கண்டு, சாக்லெட், பிஸ்கட்போன்றவையும் ஏற்றுமதியாவதில்லை. மாறாக, ஆண்டுதோறும் பல ஆயிரம் டன் நீரா சர்க்கரை இறக்குமதி செய்யப்படுவது, நமது தென்னைப் பொருளாதாரத்தைப் பின்னுக்குத் தள்ளுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x