Last Updated : 14 Oct, 2022 06:55 AM

 

Published : 14 Oct 2022 06:55 AM
Last Updated : 14 Oct 2022 06:55 AM

ப்ரீமியம்
நோபல் 2022 அமைதி: அமைதியின் விலை என்ன?

அமைதிக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு சிறையில் உள்ள மனித உரிமைப் போராளி அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கும் ரஷ்யாவில் உள்ள ‘மெமோரியல்’ எனும் மனித உரிமை அமைப்புக்கும் உக்ரைனையும் ரஷ்யாவையும் ஒட்டியுள்ள பெலாரஸ் எனும் கிழக்கு ஐரோப்பிய நாட்டில் இயங்கும் ‘சிவில் உரிமைகளுக்கான மையம்’ (Centre for Civil Liberties) எனும் அமைப்புக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

1980-களின் மத்தியில் பெலாரஸில் ஜனநாயக இயக்கம் ஒன்றை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றியவரான பியாலியாட்ஸ்கி ஒரு ஜனநாயகப் போராளி. ‘விஸ்னா’ எனும் அமைப்பை உருவாக்கி, சர்வாதிகாரத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை எதிர்த்து நின்று போராடி, 2011 முதல் 2014 வரை சிறையில் அடைக்கப்பட்டவர். விடுதலையான பிறகும் தொடர்ந்து சர்வாதிகாரத்தை எதிர்த்து நின்ற அவர், மீண்டும் 2020 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெலாரஸ் புதினின் ரஷ்யாவுக்கு மிக அருகிலும் அரசியல்ரீதியாகவும் நெருக்கமாக உள்ள ஒரு நாடு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x