Last Updated : 12 Jun, 2022 10:24 AM

 

Published : 12 Jun 2022 10:24 AM
Last Updated : 12 Jun 2022 10:24 AM

ப்ரீமியம்
விட்டல்ராவ் 80: கலைக்கு ஓர் அர்த்தம்

கடந்த நூற்றாண்டின் அறுபதுகளில் வேலைவாய்ப்பின் காரணமாக சேலத்திலிருந்து சென்னையை நோக்கி வந்த தலைமுறையைச் சேர்ந்தவர் விட்டல்ராவ். ஆனால், வேலைக்கும் அப்பால் கலை இலக்கிய வானில் சிறகடித்துப் பறக்கும் விழைவும் விசையும் அவர் மனத்தில் நிறைந்திருந்ததால், ஒருபுறம் வேலை பார்த்தபடியே மறுபுறம் அவர் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து ஓவியம் பயிலத் தொடங்கினார். ஓவியம் அவருடைய விருப்பத்துக்குரிய கலைத் துறைகளில் முதன்மையானதாக இருந்தது.

இரண்டாண்டு காலப் படிப்பை முடித்து, நல்ல ஓவியர்களில் ஒருவராக அனைவராலும் மதிக்கப்படுவராக உயர்ந்தார். பிற ஓவிய நண்பர்களோடு இணைந்து ஓவியக் கண்காட்சிகளில் தம் ஓவியங்களைக் காட்சிக்கு வைத்தார். அதே சமயத்தில், தன் விருப்பத்துக்குரிய மற்றொரு துறையான எழுத்துத் துறையிலும் அடியெடுத்து வைத்தார். 1967-ல் ஆனந்த விகடன் இதழில் வெளியான ‘வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம்’ என்னும் சிறுகதை வழியாக அவருடைய இலக்கியப் பயணமும் தொடங்கியது. எதிர்பாராத வாழ்க்கை இடர்களால் ஓவியத்தில் தொடர்ந்து ஆழ்ந்து ஈடுபட முடியாமல் விலகிய விட்டல்ராவ், இலக்கியத்தையே தன் உலகமாக மாற்றிக்கொண்டார். கடந்த 55 ஆண்டு காலமாக அப்பயணம் தொடர்ந்தபடி இருக்கிறது. 12 நாவல்களும் 4 குறுநாவல்களும் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் 10 கட்டுரைத் தொகுதிகளும் இதுவரை வெளிவந்துள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x