Published : 25 May 2022 05:47 AM
Last Updated : 25 May 2022 05:47 AM

ப்ரீமியம்
பருத்தி விலை உயர்வு: நெசவுத் தொழிலுக்கு அச்சுறுத்தல்

வழக்கத்துக்கு மாறாகத் தொடர்ந்து அதிகரித்துவரும் பருத்திப் பஞ்சு மற்றும் நூலின் விலை உயர்வு காரணமாகத் தமிழ்நாட்டின் நூற்பாலைகளும் பின்னலாடை நிறுவனங்களும் மூடப்படும் நிலையை நோக்கித் தள்ளப்பட்டிருப்பது துயரத்துக்குரியது. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் பின்னலாடைத் தொழிலைப் பின்னடைவிலிருந்து மீட்கவும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக இருக்கும் நெசவுத் தொழிலைப் பாதுகாக்கவும், பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்திட ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் பருத்தி விலை உயர்வைச் சமாளிக்க முடியாத நூற்பாலைகள், இந்தப் பிரச்சினை முடியும் வரை தங்களது உற்பத்தியை நிறுத்திக்கொள்வதாக முடிவெடுத்துள்ளன. ஜனவரியில் தொடங்கி ஐந்து மாதங்களில் மட்டும் பருத்திப் பஞ்சின் விலை 53%, பருத்தி நூலின் விலை 21% அதிகரித்துள்ளது. இப்படியொரு முன்னுதாரணமற்ற விலை உயர்வை நூற்பாலைகளும் நெசவாலைகளும் இதற்கு முன் சந்தித்ததில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x