Published : 23 May 2022 07:01 AM
Last Updated : 23 May 2022 07:01 AM

ப்ரீமியம்
பெட்ரோல், டீசல்: மாநில அரசின் வரியும் குறைக்கப்படுமா?

தொடர்ந்து அதிகரித்துவரும் விலைவாசி உயர்வின் காரணமாக நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் ஏழை, எளிய மக்களுக்குச் சற்றே ஆறுதல் அளிக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பெட்ரோல் மீதான தீர்வை லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான தீர்வை லிட்டருக்கு ரூ.6 குறைக்கப்படும் என்ற அவரது அறிவிப்பு, எரிபொருட்களின் விலை உயர்வு காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்துவருவதைக் கட்டுப்படுத்த உதவக்கூடும்.

தவிர, சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.200 வீதம் 12 சிலிண்டர்களுக்கான மானியங்கள் 9 கோடி பேருக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, கடந்த ஆண்டு நவம்பரில் பெட்ரோல் மீதான தீர்வையில் லிட்டருக்கு ரூ.5, டீசல் மீதான தீர்வையில் லிட்டருக்கு ரூ.10 என மத்திய அரசு குறைத்தது. நவம்பரில், மதிப்புக் கூட்டுவரியை (வாட்) குறைத்துக்கொள்ளாத மாநில அரசுகள் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தாமே முன்வந்து அவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்தகைய எதிர்பார்ப்பு மக்களிடமும் தீவிரமாக எழுந்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x