Published : 16 May 2022 07:24 AM
Last Updated : 16 May 2022 07:24 AM

ப்ரீமியம்
சொத்துவரி உயர்வு: உள்ளாட்சிப் பொறுப்புகளும் உயரட்டும் ஆண்டுதோறும்!

நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஆண்டுதோறும் சொத்துவரியை உயர்த்த வகைசெய்யும் சட்டத் திருத்தங்கள் நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டிருப்பது, பொதுமக்களிடம் அது குறித்த அச்சத்தையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. அவ்வப்போது மாநில அரசு அளிக்கும் அறிவுறுத்தல்களுக்கேற்ப நகர்ப்புற உள்ளாட்சிகள் வரிவிகித உயர்வு குறித்துத் தீர்மானங்களை நிறைவேற்றிக்கொள்ள இத்திருத்தங்கள் வகைசெய்கின்றன.

கடந்த ஏப்ரலில், நகர்ப்புற உள்ளாட்சிகளின் வருவாயை அதிகப்படுத்துவதற்காக சென்னையின் முக்கியப் பகுதிகளில் 50 முதல் 150% வரையிலும் மற்ற நகராட்சிகளில் 100% வரையிலும் சொத்துவரிகள் உயர்த்தப்பட்டன. ஏற்கெனவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வு காரணமாக, மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நிலையில், சொத்துவரியைப் படிப்படியாக உயர்த்தியிருக்கலாமே என்ற குரலைப் பொதுமக்களிடமிருந்து கேட்க முடிகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x