Published : 15 May 2022 09:06 AM
Last Updated : 15 May 2022 09:06 AM

ப்ரீமியம்
கரோனா பெருந்தொற்று: வருங்காலத்துக்காக நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

யுவால் நோவா ஹராரி

முந்தைய காலகட்டங்களில், ‘ப்ளாக் டெத் (கறுப்பு மரணம்)’ எனும் ப்ளேக் நோயை மனித குலம் எதிர்கொண்டபோது, அது எப்படி வந்தது அல்லது அதை எப்படி நிறுத்துவது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. இதிலிருந்து கரோனா பெருந்தொற்று முற்றிலும் வித்தியாசமானது. புதிய தொற்றுநோய் பற்றிய முதல் எச்சரிக்கை மணி டிசம்பர் 2019-ன் இறுதியில் ஒலிக்கத் தொடங்கியது. 2020, ஜனவரி 10-ம் தேதிக்குள் அறிவியலர்கள் அதற்குக் காரணமான வைரஸைப் பிரித்தெடுத்ததோடு மட்டுமல்லாமல், அதன் மரபணுவையும் வரிசைப்படுத்தி, அது தொடர்பான தகவல்களை இணையத்தில் வெளியிட்டார்கள். அடுத்த சில மாதங்களுக்குள், எந்த நடவடிக்கைகள் மூலம் தொற்றுநோய்ப் பரவலின் வேகத்தைத் தணிக்கவும் நிறுத்தவும் முடியும் என்பதும் தெளிவானது. ஒரு வருடத்துக்குள் பயனுள்ள தடுப்பூசிகள் பெரும் எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டன. மனிதர்களுக்கும் நோய்க் கிருமிகளுக்கும் இடையிலான போரில், மனிதர்கள் ஒருபோதும் இவ்வளவு சக்திவாய்ந்தவர்களாக இருந்ததில்லை. ஆனால், இதை அரசியலர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x