Published : 05 May 2022 07:17 AM
Last Updated : 05 May 2022 07:17 AM

ப்ரீமியம்
தேர்வுக் காலம் இது... ஓய்வெடுக்கட்டும் ஒலிபெருக்கிகள்!

மகாராசன்

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மக்களின் தொழில், பண்பாட்டுச் செயல்பாடுகள் போன்ற பலவும் பெரும் முடக்கத்துக்கும் நெருக்கடிக்கும் ஆளாகின. இதில் இளைய தலைமுறையின் எதிர்காலத்தோடு தொடர்புடைய கல்விச் செயல்பாடுகள் முற்றாகவே முடங்கிப்போயிருந்தன. பேரிடர்க் கால முடக்கத்துக்குப் பிறகு, பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர் - ஆசிரியர் உறவிலும், கற்றல் - கற்பித்தல் நாட்டத்திலும் மிகப் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

பெரும்பான்மை மாணவர்களின் நெறிபிறழ் நடத்தைகள், அலட்சிய மனப்போக்கு, படிப்பில் நாட்டமின்மை, கைபேசிப் பயன்பாடுகள், போதைப் பழக்கம், கண்டிப்பும் கவனிப்பும் இல்லாத பெற்றோர்கள், குறுகிய காலகட்டத்துக்குள் பாடங்களை நடத்தி முடித்து, பல கட்டத் தேர்வுகளை நடத்தி, விடைத்தாள்களைத் திருத்தி, செய்முறைத் தேர்வுகளை முடிக்க வேண்டிய கட்டாயம் எனப் பல நெருக்கடிகளையும் இடர்ப்பாடுகளையும் கடந்துதான் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களைப் பொதுத்தேர்வு எழுதுவதற்குத் தயார்படுத்தியுள்ளனர் ஆசிரியர்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x